Sunday, October 7, 2012

தேவர், முதலி என்பது பட்டம்


வன்னியர் குலத்தில் பிரிவுகள் அகமுடையான், நத்தமன் பிரிவுகள் உள்ளன. பார்க்கவ கோத்திரமும் வன்னியருக்கு உள்ளது.

உடையார், தேவர் என்பன உயர்வு நிலையை உணர்த்தும் பட்டங்கள். பாண்டியர் காலத்தில்

பரூரை(இன்றைய முகாசா பரூர்) ஆண்ட கச்சிராயர் வன்னிய குலத்தினர் ஆவர்.இக் கச்சிராயர்களில் ஒருவர் ஒரு கல்வெட்டில் "உடையார் தேவர் கச்சிராயர்" எனக் குறிப்பிடப்படுகிறார்.எனவே உடையார் தேவர் என்பது உயர்வான நிலையைக் குறிக்கும் விருதுப் பெயரேயன்றி குலப்பெயரன்று.

பார்கவ குலத்தினருக்கும் வன்னியருக்கும் உள்ள தொடர்பு ஆதாரங்கள் கொண்டது.பார்க்கவ குலத்தினர் திருக்கோவலூரை ஆண்ட தெய்வீக மன்னன் வழி வந்தோர் ஆவர். அம்மன்னன் வழி வந்தவர்களில் வன்னிய குலத்தின் பிரிவுகள் சிலவும் உண்டு.இதை பார்க்கவ குலத்தினரே தெளிவுபடுதியுள்ளனர்.(ஆதாரம் பார்கவ குலத்தினரின் கிருஷ்ணாபுரம் செப்பேடு)

அகமுடையார் அல்லது அகம்படியர் என்பது ஒரு குலமன்று.வேளாளர்கள் அகம்படியராக இருந்துள்ளனர்.கள்ளர்,மறவர் குலத்தில் இருந்து கிளைத்ததுதான் மூன்றாவதான அகம்படியர் இனம்.

அதனால்தான் அகமுடையார் எனக் குறிப்பிடும்போது அகமுடையார்(முதலியார்). அகமுடையார்(தேவர்) என்று ஜாதியை குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்.

முதலியார், முதலி என்பவை குலங்களல்ல. செங்குந்தர், வேளாளர், சேனைத் தலைவர், வன்னியர்,கள்ளர் போன்றோர் முதலி பட்டம் உள்ளவர்கள். கல்வெட்டு மூலமாக தாழ்த்தப்பட்ட இனத்தவர் சிலருக்கும் முதலி பட்டம் இருந்தது தெரியவருகிறது. பறை முதலி என்று குறிப்பிடப்படுவதால் இது உறுதியாகிறது.