Saturday, June 29, 2013

ஹிரண்யவர்மருக்கு சோழர் முடியைச் சூட்டுதல் பற்றி "கோயிற் புராணம்" கூறுவது


வன்னியர் குலத்தின் சோழனார் அவர்களின் மூதாதையார் என்று ஆறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழ மன்னர் ஹிரண்யவர்மன் அவர்களை தம் CASTE AND TRIBES OF SOUTHERN INDIA நூலில் EDGUR THURSTON என்னும் ஆங்கிலேயர் குறிப்பிட்டிருந்தார் .


ஹிரண்யவர்மருக்கு சோழர் முடியைச் சூட்டுதல் பற்றி "கோயிற் புராணம்" கூறுவது
=======================================

"தில்லைக் காட்டைத் திருத்தித் தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப்பெற்ற தில்லை ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் சந்நிதியில், ச்ரீபஞ்சாஷரப்படியின் மீது இரணியவன்மனாருக்கு வசிட்டர், பதஞ்சலி, உபமன்யு, தில்லை மூவாயிரவந்தணர்கள் திருமுன்பு, பகல் தீவர்த்தியேற்றி, புலிக் கொடி கொடுத்து, ஆத்திமாலை அணிவித்து, சோழக் குலமகள் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து வியாக்கிரபாத முனிவர் திருமணம் செய்வித்து, முடிசூட்டிப் பட்டாபிஷேகம் செய்து சோழ மன்னனாக விளங்கச் செய்தார்".

இந்த செய்தி தில்லை தீட்சிதர்களில் ஒருவரான கி.பி.13- 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எழுதிய "கோயிற் புராணம்" என்ற நூலில் உள்ளது.