Sunday, November 10, 2013

சோழர் குல நாயகன் தில்லை நடராஜன் சன்னதியில் குலோத்துங்கன் முடி சூடிய செய்தி

சோழர் குல நாயகன் தில்லை நடராஜன் சன்னதியில் குலோத்துங்கன் முடி சூடிய செய்தி

நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 



நடராஜனை சோழர் குல நாயகன் என்று சொல்லும் பாடல்-- விக்கிரம சோழர் காலம்



நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 


இன்றும் இந்த கோவிலில் தான் சோழனார் குடும்பத்திற்கு முடிசூட படுகிறது ... இவர்கள் வன்னியரில் படையாட்சி வர்கத்தினர்

தில்லை வாழ் அந்தணர்கள் , மகாராஜா ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்

தில்லை வாழ் அந்தணர்கள் , மகாராஜா ஸ்ரீ சாமிதுரை சூரப்ப சோழனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்


நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு
ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் 


மூவேந்தர்கள் வன்னியர்களே - வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார்


கும்பகோணம் "தமிழ் மன்னர் குல சங்கம் " சார்பில் வன்னியர் குல க்ஷத்ரிய மாநாட்டில் , பிற்கால சோழர் வரலாறு எழுதிய வரலாற்று புலி திரு.சதாசிவ பண்டாரத்தார் கலந்து கொண்டார்

  சதாசிவ பண்டாரத்தார் , தான் எழுதிய நூலின் மூலமும் தனது ஆராயிச்சி மூலமும் மூவேந்தர்கள் வன்னியர்களே என்று உரை ஆற்றினார் ..
 
ஆனால் இவர் நூலை மேற்கோள் காட்டி , அதில் கூறப்படும் பட்டங்கள் எங்களுடையது என்று பொய்யான சரித்திரங்களை எழுதுவோர்களை என்னவென்று சொல்வது ..

எழுதியவர் உயிருடன் இல்லை என்பதால் பொய்யர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது 
 










 

Sunday, September 29, 2013

கி.பி.7 ஆம் நூற்றாண்டு தருமபுரி கல்வெட்டு

10 ஆம் நூற்றாண்டென்ன அதற்கு முன்னரே பள்ளி இனத்தவர் இருந்தனர்.

ஆதாரம்: தருமபுரி மாவட்டம் பலிஞ்சரஹள்ளி எனும் ஊரில் உள்ள நடுகல் கூறும் செய்தி.இதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.

"கோவிசைய மயீந்திர பருமற்கு

யாண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று பட்டா நெருமேதிகாரி"

(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)

காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.

இதன் மூலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டளவிலேயே பள்ளி இனத்தவர் இருந்தனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

Tuesday, August 13, 2013

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் கடிதம்

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் தற்போதைய அரசர் , பிச்சாவரம் தொடர்பான வாழும் சோழர்களை பற்றிய செய்திகளை சேகரிப்பதனால், ஏற்க்கனவே நமது வரலாற்று ஆய்வாளர் அண்ணல் கண்டர் அவர்களை நலம் விசாரித்தும் , சோழனார் மற்றும் உடையார்பாலயத்து இளவரசியும் , சோழனாரின் மனைவியுமான சாந்தி தேவி அவர்களை நலம் விசாரித்தும் கடிதம் அனுப்பிருந்தார் ...

இப்போது அண்ணல் கண்டர் அவர்களின் முயற்சியை உலகுக்கு தெரியப்படுத்த இணையங்கள் மூலம் பதிவு செய்யும் எங்கள் சிறு முயற்ச்சியை ஊக்கபடுத்தும் விதமாக எனக்கு , யாழ்பாணத்து அரசர் குடும்பத்தில் இருந்து வந்த கடிதம் ,,




Saturday, July 6, 2013

யாழப்பாணத்து அரசர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா "- வன்னிய குல சோழனார் "ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்" அவர்களுக்கு எழுதிய மடல்



வன்னிய சொந்தங்களுக்கு மாபெரும் மகிழிச்சியான செய்தி :

இலங்கையில் யாழ்ப்பாணம் என்னும் இடத்தை ஆட்சி செய்தவர்கள் ஆரிய சக்கரவர்த்தி (இவர்கள் தமிழ் சமூக அரசர்கள் . ஆரிய சக்ரவர்த்தி என்பது அவர்கள் குடும்ப பெயர் ).

இவர்கள் பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கை சென்று பாண்டிய மன்னனின் மகள் திருமணத்தை நடத்தி வைத்து இலங்கை அரசனின் ஆணைக்கு இணங்கி அடங்காபற்றை வெற்றி கொண்ட வன்னிய குலத்தினருடன் , இலங்கை வந்த "சிவிங்கை ஆரிய சக்கரவர்த்தி" வம்சத்தை சேர்ந்த தமிழரும் யாழ்ப்பான அரசருமான , நல்லூர் அரண்மனையை சேர்ந்த அரசர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா " அவர்கள் நமது சோழர் குடியின் இன்றும் வாழும் அரசரான “ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்’ அவர்களோடு சமீபத்தில் , இருவரின் ராஜ குடும்பம் நட்ப்புறவும் வளம் பெறும்பொருட்டு தொலைபேசியில் உரையாடினார் . 


                                 

பின்னர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா " அவர்கள் ,இவர்கள் இருவரின் ராஜ குடும்பமும் இன்னும் நெடுங்காலத்துக்கு என்றென்றும் நல்லுறவோடும் நட்போடும் இருக்க வேண்டும் என்று விரும்பி "ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்" அவர்களுக்கும், உடையார் பாளையத்து சமஸ்த்தானத்தில் (பல்லவர் குடி) பிறந்து சோழனார் அரசர் குடும்பத்தில் இன்று அரசிமாராக திகழும் ராணி "ஸ்ரீ சாந்தி தேவி" அவர்களுக்கும் , யாழ்ப்பாண அரசர் குடும்பத்தின் குல கடவுள் கைலாசநாதர் சுவாமியின் அருளால் என்றும் நலத்தோடு வாழ வாழ்த்தி வாழ்த்துமடல் அனுப்பியுள்ளனர் .




இவர்களின் சந்திப்பு நிகழ்வை ஏற்படுத்தி, இதன்மூலம் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை உருவாக்கிய திரு.அண்ணல் கண்டர் , முரளி நாயகர் அவர்களின் முயற்ச்சிக்கு கோடி வன்னியர்குல க்ஷத்ரியர் குடிகளின் நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் ...

இதோ அந்த வாழ்த்து மடல்




1. வாழும் சோழ வாரிசுகளின் புகைப்படங்களை காண :

http://chozhar-vanniyar.blogspot.com/2011/12/blog-post_4582.html


2. வாழும் சோழ வாரிசுகளின் பேட்டிகளை காண மற்றும் அவர்களை பற்றி  நக்கீரன் தினமணி போன்ற நாளிதழ்களின் பேட்டி :

http://chozhar-vanniyar.blogspot.com/2012_06_01_archive.html