Tuesday, August 13, 2013

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் கடிதம்

யாழ்பாணத்து ஆரிய சக்ரவர்த்தி ராஜ குடும்பத்தின் தற்போதைய அரசர் , பிச்சாவரம் தொடர்பான வாழும் சோழர்களை பற்றிய செய்திகளை சேகரிப்பதனால், ஏற்க்கனவே நமது வரலாற்று ஆய்வாளர் அண்ணல் கண்டர் அவர்களை நலம் விசாரித்தும் , சோழனார் மற்றும் உடையார்பாலயத்து இளவரசியும் , சோழனாரின் மனைவியுமான சாந்தி தேவி அவர்களை நலம் விசாரித்தும் கடிதம் அனுப்பிருந்தார் ...

இப்போது அண்ணல் கண்டர் அவர்களின் முயற்சியை உலகுக்கு தெரியப்படுத்த இணையங்கள் மூலம் பதிவு செய்யும் எங்கள் சிறு முயற்ச்சியை ஊக்கபடுத்தும் விதமாக எனக்கு , யாழ்பாணத்து அரசர் குடும்பத்தில் இருந்து வந்த கடிதம் ,,




Saturday, July 6, 2013

யாழப்பாணத்து அரசர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா "- வன்னிய குல சோழனார் "ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்" அவர்களுக்கு எழுதிய மடல்



வன்னிய சொந்தங்களுக்கு மாபெரும் மகிழிச்சியான செய்தி :

இலங்கையில் யாழ்ப்பாணம் என்னும் இடத்தை ஆட்சி செய்தவர்கள் ஆரிய சக்கரவர்த்தி (இவர்கள் தமிழ் சமூக அரசர்கள் . ஆரிய சக்ரவர்த்தி என்பது அவர்கள் குடும்ப பெயர் ).

இவர்கள் பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கை சென்று பாண்டிய மன்னனின் மகள் திருமணத்தை நடத்தி வைத்து இலங்கை அரசனின் ஆணைக்கு இணங்கி அடங்காபற்றை வெற்றி கொண்ட வன்னிய குலத்தினருடன் , இலங்கை வந்த "சிவிங்கை ஆரிய சக்கரவர்த்தி" வம்சத்தை சேர்ந்த தமிழரும் யாழ்ப்பான அரசருமான , நல்லூர் அரண்மனையை சேர்ந்த அரசர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா " அவர்கள் நமது சோழர் குடியின் இன்றும் வாழும் அரசரான “ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்’ அவர்களோடு சமீபத்தில் , இருவரின் ராஜ குடும்பம் நட்ப்புறவும் வளம் பெறும்பொருட்டு தொலைபேசியில் உரையாடினார் . 


                                 

பின்னர் " ராஜா ரெமிகியஸ் கனகராஜா " அவர்கள் ,இவர்கள் இருவரின் ராஜ குடும்பமும் இன்னும் நெடுங்காலத்துக்கு என்றென்றும் நல்லுறவோடும் நட்போடும் இருக்க வேண்டும் என்று விரும்பி "ஸ்ரீ ஸ்ரீ மகாராஜா சிதம்பரநாத சூரப்ப சோழனார்" அவர்களுக்கும், உடையார் பாளையத்து சமஸ்த்தானத்தில் (பல்லவர் குடி) பிறந்து சோழனார் அரசர் குடும்பத்தில் இன்று அரசிமாராக திகழும் ராணி "ஸ்ரீ சாந்தி தேவி" அவர்களுக்கும் , யாழ்ப்பாண அரசர் குடும்பத்தின் குல கடவுள் கைலாசநாதர் சுவாமியின் அருளால் என்றும் நலத்தோடு வாழ வாழ்த்தி வாழ்த்துமடல் அனுப்பியுள்ளனர் .




இவர்களின் சந்திப்பு நிகழ்வை ஏற்படுத்தி, இதன்மூலம் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை உருவாக்கிய திரு.அண்ணல் கண்டர் , முரளி நாயகர் அவர்களின் முயற்ச்சிக்கு கோடி வன்னியர்குல க்ஷத்ரியர் குடிகளின் நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் ...

இதோ அந்த வாழ்த்து மடல்




1. வாழும் சோழ வாரிசுகளின் புகைப்படங்களை காண :

http://chozhar-vanniyar.blogspot.com/2011/12/blog-post_4582.html


2. வாழும் சோழ வாரிசுகளின் பேட்டிகளை காண மற்றும் அவர்களை பற்றி  நக்கீரன் தினமணி போன்ற நாளிதழ்களின் பேட்டி :

http://chozhar-vanniyar.blogspot.com/2012_06_01_archive.html

Saturday, June 29, 2013

ஹிரண்யவர்மருக்கு சோழர் முடியைச் சூட்டுதல் பற்றி "கோயிற் புராணம்" கூறுவது


வன்னியர் குலத்தின் சோழனார் அவர்களின் மூதாதையார் என்று ஆறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழ மன்னர் ஹிரண்யவர்மன் அவர்களை தம் CASTE AND TRIBES OF SOUTHERN INDIA நூலில் EDGUR THURSTON என்னும் ஆங்கிலேயர் குறிப்பிட்டிருந்தார் .


ஹிரண்யவர்மருக்கு சோழர் முடியைச் சூட்டுதல் பற்றி "கோயிற் புராணம்" கூறுவது
=======================================

"தில்லைக் காட்டைத் திருத்தித் தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப்பெற்ற தில்லை ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் சந்நிதியில், ச்ரீபஞ்சாஷரப்படியின் மீது இரணியவன்மனாருக்கு வசிட்டர், பதஞ்சலி, உபமன்யு, தில்லை மூவாயிரவந்தணர்கள் திருமுன்பு, பகல் தீவர்த்தியேற்றி, புலிக் கொடி கொடுத்து, ஆத்திமாலை அணிவித்து, சோழக் குலமகள் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து வியாக்கிரபாத முனிவர் திருமணம் செய்வித்து, முடிசூட்டிப் பட்டாபிஷேகம் செய்து சோழ மன்னனாக விளங்கச் செய்தார்".

இந்த செய்தி தில்லை தீட்சிதர்களில் ஒருவரான கி.பி.13- 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எழுதிய "கோயிற் புராணம்" என்ற நூலில் உள்ளது.

Tuesday, November 6, 2012

பாதி சிதம்பரத்தையே அடைத்து கொண்டிருக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் எப்படி வந்தது தெரியுமா ?




சிதம்பரத்தில் பாதி நிலம் பிச்சாவரம் மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது . செட்டியார் நடத்தும் அந்த அண்ணாமலை பல்கலைகழகம் நிலம் கூட இந்த சோழனார் குடும்பத்திடம் தான் இருந்தது .

இவரின் மூதாதையர் ஒரு திருமணத்திற்க்காக முகையூர் சுப்ரமணிய பிள்ளையிடம் அறுபதாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்கள் .அந்த பணத்தை திருப்பி தர இயலாத நிலைமை வந்ததால் நிலத்தை ஏலமிடும் நிலைமைக்கு வந்தார்கள் . அப்போது ராமநாதபுரம் கானாடுகாத்தானை சேர்ந்த அண்ணாமலை செட்டியார் அவர்கள் அந்த நிலத்தை ஏலம் எடுத்தார் .அந்த நிலம்தான் இன்று அண்ணாமலை பல்கலைகழகம் .

---- நக்கீரன்

Monday, November 5, 2012

மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012)

மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012) .........................

 "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் "


=============



Sunday, November 4, 2012

களப ராஜராஜன் என்றுள்ள கல்வெட்டு சாளுக்கிய சோழனது . நேரடி சோழனது அல்ல



“ களப ராஜராஜன்”

“ கள்வன் ராஜராஜன்”

என மெய்க்கீர்த்தி கல்வெட்டு "இராண்டாம் இராசராச சோழனை" களபர்-கள்வன் எனவும் குறிப்பிடுவதால் , "முதலாம் ராஜ ராஜனும் " கள்ளர் சமூகமாக இருக்கலாம் என்று கள்ளர் சமூக நண்பர்கள் கூறுவதால் , அது மிகப்பெரும் பிழை என்று சொல்கிறேன் .

இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல். ) என்பது கள்ளர் சமூகத்தார் வாதம் .

இது மட்டமான ஆதாரம் .

காரணம் , இந்த வார்த்தை உள்ள மெய்க்கீர்த்தி "இராண்டாம் இராசராச சோழனை" சொல்வது . அவன் முதலாம் ராஜ ராஜன் அல்ல .
அதோடு இந்த மெய்க்கீர்த்தி இரண்டாம் இராசராச சோழனால் வெளி இடப்பட்டது , இந்த இரண்டாம் ராஜா ராஜன் யார் தெரியுமா ?

இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான்.இங்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தே சாளுக்கிய மரபு கொண்டவர்கள் சோழர்கள் ... ஆகையினால் இவன்  சாளுக்கிய சோழன் ...

ஆகவே இது மட்டமான ஆதாரம் .

அதுமட்டுமில்லை களப என்பதற்கு பல பொருள் உண்டு .  களப என்றால் கலவை , யானை போன்ற பல பொருள் உண்டு .

எடுத்துக்காட்டு :

1. களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம்.       

2. களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய       வீதியையும்

Refer:  http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=7

3. களப வன முலைப் பொறை சுமந்து உருகி இறந்ததோ -சந்தனக்குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச்
சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ

Refer : http://www.tamilvu.org/slet/l3100/l3100pd2.jsp?bookid=63&pno=64

4. பரிமள களப சுகந்த -- நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும்

Refer : http://www.kaumaram.com/thiru_uni/tpun0078.html

இதுபோன்ற பல பொருள்  உண்டு .

ஆகவே இம்மன்னன் யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்று புகழ  “ களப ராஜராஜன்” என்று பாராட்ட பெற்றிருக்கலாம் .

 சாளுக்கிய மரபுடைய இந்த சோழனை "களப " என்பது என்று கூறுவது அவன் களம் கண்டவன் என்பதனாலோ, அல்லது யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்பதாலோ ,அல்லது சோழ மற்றும் சாளுக்கிய குலத்து கலப்பில் வந்த மன்னன் என்பதாலோ என்று பல பொருள்கள் இதில் அடங்கும் .அந்த கல்வெட்டின் முழு வாக்கியம் படித்தால்தான் அதன் முழு செய்தி நமக்கு கிடைக்கும் .

“ கள்வன் ராஜராஜன்” என்றாலும் இங்கே ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்ல இயலாது . கள்வன் என்பது திருடனை குறிப்பது . ஒருதன் நாட்டு மக்களை காக்கும் ஒரு  மன்னனை அப்படி கூற காரணம் , அவன் மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பதனால் கூட இருக்கலாம் .

அடுத்து முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன்(கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்

Refer: http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312112.htm

ஆக முத்தரையர் மன்னருக்கும் இந்த கள்வர் பட்டம் உண்டு . அதோடு முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று சொல்வதாலும், இவர்கள் கன்னட நாட்டவர் என்பதாலும் , இதே போல இரண்டாம் ராஜ ராஜனும் சாளுக்கிய (கன்னடர் ) பகுதியில் இருந்து வந்தமையால் அதே கள்வர் என்னும் வார்த்தையை உபயோகித்திருக்கலாம் அல்லவா .........

அதோடு  சாளுக்கிய மரபுக்கும் கள்ளர் சாதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

சாளுக்கிய மரபு கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனே பூணூல் அணிந்தவன் . இதை அப்போது எழுதிய களிங்கத்துபரணியும் உறுதிபடுத்துகிறது .

பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து,

'அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே'


கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.

இவன் பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர் கூறுகின்றார். இதனால் அக்காலத்திய தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச் சத்தி்யரின் கால்வழியில் வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய ஒழுக்கத்தைக் கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
ஆசிரியர் சயங்கொண்டாரும் சோழர் மரபு வரலாறு கூறுமிடத்துச்
சோழர்களின் முன்னோராக வடநாட்டுச் சத்திரியர்
 பலரைக் கூறுவதும் 
ஈண்டு நோக்கத்தக்கது. 

இவரை அடுத்துச் சோழர் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய மூவர் உலாவிலும், சோழ மரபு கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்சத்திரியர் பலரைக் கூறுவதும் கருததக்கது. '...
----------------------- கலிங்கத்துப்பரணி

Reference: http://www.tamilvu.org/library/l5920/html/l5920p12.htm



கள்ளர்கள் பூணூலும் அணிவதில்லை .. ஆனால் இந்த வழக்கம் வன்னியரில் உண்டு .'

இந்த கீழை சாளுக்கிய மரபு கூட வன்னியருக்கும் உறவாக உள்ளது .. அதாவது வன்னியர் பிறப்பை பற்றி சொல்லும் நூல்களுள் அனைத்தும் அக்னியில் இருந்து பிறந்தவர் என்று கூற , கல்லாடம் மட்டும் பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கூறுகிறது .
அதாவது சாளுக்கியர் கீழ் குறுநில மன்னராக இருந்துள்ளனர் என்பது இதன் அர்த்தம் .அது மட்டுமல்லாது வன்னியர்களுக்கு சாளுக்கியர் என்ற பட்டமும் உண்டு .

அடுத்து தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (மூன்று தொகுதிகள்) - (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்) (வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக் கழகம்) என்ற பகுதியில் இடங்கை வலங்கை சாதியை பற்றி குறிப்பிடும் போது ,

வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இடங்கைச் சாதியினராக (1) மேலசெட்டி (2) கைகோளர் (3) பள்ளி (4) படையாச்சி (5) மறவர் (6) மேளக்காரர் என ஆறு சாதியினர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.

Reference : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21440:2012-09-27-18-44-18&catid=25:tamilnadu&Itemid=137

தஞ்சை பகுதிகளில் மாரதியர் ஆட்சியின் போது இடங்கை வலங்கை சாதிகள் என்று குறிப்பிட பட்டு இருப்பதில் கள்ளர் என்ற சாதி காணப்படவில்லை . அவர்கள் தஞ்சை குடந்தை பகுதிகளில் இருந்தவர் பற்றி குறிப்பிடும் போது படையாச்சி ,  மறவர் என்ற சாதிகள் இருந்ததாக மட்டுமே கூறுகின்றனர் . தஞ்சை கள்ளர்கள் இங்கே பன்னெடுங்காலமாக வாழ்ந்தார்கள் என்றால் ஏன் அவர்கள் குறிப்பிட படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது .


நன்றி : இந்த களப என்னும் கல்வெட்டு குறிப்பை பற்றி செய்தி எனக்கு கிடைக்க காரணமாக இருந்த திரு.ராஜேஷ் பிள்ளை அவர்களுக்கு நன்றி 

சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :

சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :







----நன்றி
சோழர் கரந்தை செப்பேடு தொகுதி
ஆசிரியர்: சி.கோவிந்தராசன்
சி.கோ.தெய்வநாயகம்
மதுரை பல்கலைக்கழகம்